புத்தாண்டில் புதுயுகம் படைப்போம்

சிவருபன் சர்வேஸ்வரி

புத்தாண்டில் புதுயுகம் படைப்போம்

புகழ்மாலை தனைச்சூடி புகழேந்தியும் வருவாய் //
கமிழ்மணம் வீசிடக் கலையோடு அருள்வாய் //
இயலோடு புதுயுகம் இசைத்திடும் நாளில் //

கனவுகள் மெய்ப்படக் காலத்தில் உயர்ந்திடுவாய் //_

நனவாக நாமும் நடைபயில வேண்டும் /_

வளர்மதியாய் ஓங்கியே வாகைசூட வருவாய் //

பாரோங்க வந்தவளே பைங்கிளியே பாராய் //

சீரோங்கும் நன்னாளில் சிறப்புகளும் கூடும் //

தேரோடும் வீதியிலே செல்வங்கள் தேங்கும் //

பூவோடு நார்சேரப் புனிதமும் பேசும் //

புதுயுகம் படைப்போம் பண்புடமை காப்போம் //

கனிந்துவிழும் போதினிலே முக்கனியும் சிறக்கும் //

முத்தமிழும் முழங்கும் முகம்மலர்ந்தே நிற்க //

எத்திசையும் ஒலிக்கட்டும் ஏழிசைக் கீதமாய் _//
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading