சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

புத்தாண்டில் புதுயுகம் படைப்போம்

சிவருபன் சர்வேஸ்வரி

புத்தாண்டில் புதுயுகம் படைப்போம்

புகழ்மாலை தனைச்சூடி புகழேந்தியும் வருவாய் //
கமிழ்மணம் வீசிடக் கலையோடு அருள்வாய் //
இயலோடு புதுயுகம் இசைத்திடும் நாளில் //

கனவுகள் மெய்ப்படக் காலத்தில் உயர்ந்திடுவாய் //_

நனவாக நாமும் நடைபயில வேண்டும் /_

வளர்மதியாய் ஓங்கியே வாகைசூட வருவாய் //

பாரோங்க வந்தவளே பைங்கிளியே பாராய் //

சீரோங்கும் நன்னாளில் சிறப்புகளும் கூடும் //

தேரோடும் வீதியிலே செல்வங்கள் தேங்கும் //

பூவோடு நார்சேரப் புனிதமும் பேசும் //

புதுயுகம் படைப்போம் பண்புடமை காப்போம் //

கனிந்துவிழும் போதினிலே முக்கனியும் சிறக்கும் //

முத்தமிழும் முழங்கும் முகம்மலர்ந்தே நிற்க //

எத்திசையும் ஒலிக்கட்டும் ஏழிசைக் கீதமாய் _//
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan