20
Nov
ஆத்மராகங்கள்
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
ஜெயம்
பெண் ஓர் இல்லறத் துறவி
அன்பை அள்ளி இறைத்திடும் இறைவி
கண்முன் தெரிகின்ற இன்னொரு பிரபஞ்சம்
என்னென்று சொல்வேன் அழகது கொஞ்சும்
தன்னைப்போல படைக்கவென இறைவனவன் படைப்பு
உண்மையாக குவலயத்தின் வரமெனவே கிடைப்பு
உதிரம் பாய்ச்சி உயிர்தரும் தன்மை
புதிரென்றால் பெண்ணன்றோ மலர்களிலும் மென்மை
நாணும் அச்சத்தை தானுமிங்கு கைவிட்டு
ஆணுக்கு நிகரெனவே பெண்ணவளும் புறப்பட்டு
மண்ணென்ன விண்ணின் எல்லையும் தொட்டு
கண்டாளே சரித்திரம் முகவரி இட்டு
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.