பேரிடர்

ஜெயம்

வானம் கிழிந்து மழை கொட்டியதே
ஞாலம் நிறைந்து நீர் முட்டியதே
புயலென மாறிய காற்றதன் சீற்றம்
இயற்கையின் கோர தாண்டவ ஆட்டம்

நீர்வெள்ளத்துள் கிராம் மூழ்கி அழியுது
பார்க்காது மழையும் பேயாய் பொழியுது
காலனாய் மாறிக்கொண்டதே பயங்கரப் புயல்
பாழாய்ப்போன சூறாவளியின் மாய்த்திடும் செயல்

பேரிடர் ஒன்றால் பூமி கொந்தளித்தது
பாரின் மேலே உயிரும் தத்தளித்தது
அடியோடு பாறி மரங்களும் சாய்தன
குடிசைகள் மூழ்கி நீருக்குள் கரைந்தன

பேரிடர் தந்த வலிகளை நீக்க
பிரிவினை மறந்து மனிதமும் பூக்க
அந்த இருட்டிலும் ஒரு ஒளி
சிந்தவே பிறந்தது கருணையின் வழி

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading