பேரிடர்

ஜெயம்

வானம் கிழிந்து மழை கொட்டியதே
ஞாலம் நிறைந்து நீர் முட்டியதே
புயலென மாறிய காற்றதன் சீற்றம்
இயற்கையின் கோர தாண்டவ ஆட்டம்

நீர்வெள்ளத்துள் கிராம் மூழ்கி அழியுது
பார்க்காது மழையும் பேயாய் பொழியுது
காலனாய் மாறிக்கொண்டதே பயங்கரப் புயல்
பாழாய்ப்போன சூறாவளியின் மாய்த்திடும் செயல்

பேரிடர் ஒன்றால் பூமி கொந்தளித்தது
பாரின் மேலே உயிரும் தத்தளித்தது
அடியோடு பாறி மரங்களும் சாய்தன
குடிசைகள் மூழ்கி நீருக்குள் கரைந்தன

பேரிடர் தந்த வலிகளை நீக்க
பிரிவினை மறந்து மனிதமும் பூக்க
அந்த இருட்டிலும் ஒரு ஒளி
சிந்தவே பிறந்தது கருணையின் வழி

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading