“பொங்குது பொங்கல்”

நேவிஸ் பிலிப் கவி இல(383) 16/01/2025

விடியலிலே வயல் நாடி
அந்தி சாயும் பொழுது வரை
ஆலையிலே அகப்பட்ட
கரும்பெனவே உடல் வருந்த

நெற்றியிலே துளிர்க்கின்ற வியர்வையுமே
முத்து முத்தாய் நெற் பயிரில்
உதிர்ந்திடவே வளர்ந்த பயிர்
கொத்தெனவே முற்றி வர

புதுப் பானை எடுத்து
புத்தரிசி அதிலிட்டு
ஆவின் பால் சேர்த்தங்கே
பொங்கி வர படைத்திடுவார்
நன்றிப் பொங்கல் கதிரோனுக்கே

படித்தவர்கள் பதவியிலே
உயர்ந்து வாழ
பால் பொங்கல் பொங்குகிறார்
நெய் மணக்க தித்திப்போடு

உழுவோரும் உழைப்போரும்
உயர்ந்திட வேண்டும்
எளியோர்க்கு அமைதி
மனதில் பொங்கிட வேண்டும்
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading