” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“பொங்குது பொங்கல்”

நேவிஸ் பிலிப் கவி இல(383) 16/01/2025

விடியலிலே வயல் நாடி
அந்தி சாயும் பொழுது வரை
ஆலையிலே அகப்பட்ட
கரும்பெனவே உடல் வருந்த

நெற்றியிலே துளிர்க்கின்ற வியர்வையுமே
முத்து முத்தாய் நெற் பயிரில்
உதிர்ந்திடவே வளர்ந்த பயிர்
கொத்தெனவே முற்றி வர

புதுப் பானை எடுத்து
புத்தரிசி அதிலிட்டு
ஆவின் பால் சேர்த்தங்கே
பொங்கி வர படைத்திடுவார்
நன்றிப் பொங்கல் கதிரோனுக்கே

படித்தவர்கள் பதவியிலே
உயர்ந்து வாழ
பால் பொங்கல் பொங்குகிறார்
நெய் மணக்க தித்திப்போடு

உழுவோரும் உழைப்போரும்
உயர்ந்திட வேண்டும்
எளியோர்க்கு அமைதி
மனதில் பொங்கிட வேண்டும்
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan