பண்படுமோ பண்பாடு 759 23.04.2026

செல்வி நித்தியானந்தன் பண்படுமோ பண்பாடு மண்ணிலே பண்பாட்டால் பலருக்கு வேதனை பகுத்தறிவு தொலைத்து பணமழிக்கும் போதனை பள்ளியில்...

Continue reading

“பொங்குது பொங்கல்”

நேவிஸ் பிலிப் கவி இல(383) 16/01/2025

விடியலிலே வயல் நாடி
அந்தி சாயும் பொழுது வரை
ஆலையிலே அகப்பட்ட
கரும்பெனவே உடல் வருந்த

நெற்றியிலே துளிர்க்கின்ற வியர்வையுமே
முத்து முத்தாய் நெற் பயிரில்
உதிர்ந்திடவே வளர்ந்த பயிர்
கொத்தெனவே முற்றி வர

புதுப் பானை எடுத்து
புத்தரிசி அதிலிட்டு
ஆவின் பால் சேர்த்தங்கே
பொங்கி வர படைத்திடுவார்
நன்றிப் பொங்கல் கதிரோனுக்கே

படித்தவர்கள் பதவியிலே
உயர்ந்து வாழ
பால் பொங்கல் பொங்குகிறார்
நெய் மணக்க தித்திப்போடு

உழுவோரும் உழைப்போரும்
உயர்ந்திட வேண்டும்
எளியோர்க்கு அமைதி
மனதில் பொங்கிட வேண்டும்
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading