பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவி நேரம்.
இல.520
இயற்கை.
*************
ஆண்டவன் கொடையினிலே, அழகிய தோற்றங்கள்.
அதிசயப் படைப்பினில் , அதற்குள்ளும் மாற்றங்கள்.

அறிந்தும், அறியாததுமாய், எண்ணற்ற , விசித்திரமான தோற்றங்கள்.
அவனியைக் காக்க வந்த அவதார தெய்வங்கள்.

எண் சாண் உடம்பினுள்ளே, உயிர் துடிக்க, உதவி நிற்கும்.
ஒட்டுகின்ற நோயதற்கும், எட்டிப்போக, மருந்தளிக்கும்.

சுட்டித் தனத்தாலே , சிறுகுறும்பும், செய்ய எண்ணும்.
வட்டி , முதலோடு, வாரியும் தான் கொண்டு செல்லும்.

** இயற்கை**
பிறக்கும் நாளினை, ஏட்டிலையும் குறித்து வைக்கும்.( ஆனால்)
இறக்கும் நாளதனை, மர்மாக மறைத்து வைக்கும் .

பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading