மாறியதே வாழ்வு…

வசந்தா ஜெகதீசன் மாறியதே வாழ்வு... தினம் தினமாய் திசைமாறும் திருப்பங்கள் பலவாகும் ஆறெனும் நதியோட்டம் அனுதினமும் பெருமன்றம் கூறுபடும் குழப்பங்கள் குறுகி வரும்...

Continue reading

உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை

செல்வி நித்தியானந்தன் (771) உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும் கோலாகலமாக...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவி நேரம்.
இல.520
இயற்கை.
*************
ஆண்டவன் கொடையினிலே, அழகிய தோற்றங்கள்.
அதிசயப் படைப்பினில் , அதற்குள்ளும் மாற்றங்கள்.

அறிந்தும், அறியாததுமாய், எண்ணற்ற , விசித்திரமான தோற்றங்கள்.
அவனியைக் காக்க வந்த அவதார தெய்வங்கள்.

எண் சாண் உடம்பினுள்ளே, உயிர் துடிக்க, உதவி நிற்கும்.
ஒட்டுகின்ற நோயதற்கும், எட்டிப்போக, மருந்தளிக்கும்.

சுட்டித் தனத்தாலே , சிறுகுறும்பும், செய்ய எண்ணும்.
வட்டி , முதலோடு, வாரியும் தான் கொண்டு செல்லும்.

** இயற்கை**
பிறக்கும் நாளினை, ஏட்டிலையும் குறித்து வைக்கும்.( ஆனால்)
இறக்கும் நாளதனை, மர்மாக மறைத்து வைக்கும் .

பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan