மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 158
செவ்வாய் 18/01/2022
“பாமுகப் பூக்கள்”
பாமுகம் அளித்த பூமகளே
பாவலர் போற்றும் பாமகளே
“பாவை” மகிழும் பெருமகளே
பார்க்கையில் நீ கலைமகளே!

அழகிய அட்டைப் படத்தாலே
அகிலம் அதிர வைத்தாயே!
பழகு தமிழிலே கவி சுமந்தே
பலரையும் களிக்கச் செய்தாயே!

இருபது மலர்களின் ஓர்கொத்து
இன்பம் தருமோர் அரும் முத்து!
பெருகுது அன்பு பெருவெள்ளம்
பேதை உன்னைக் கண்டதுமே!

சின்னவர் பெரியவர் பேதமின்றி
சிந்தையில் பிறந்த அருவித்து!
அன்னைத் தமிழைஅகத்திருத்தி
அன்பில்விளைந்த ஓர் சொத்து!

எம்மவர் கவிஞர் எழிற்கோலம்
எழிலாய் சேர்ந்த திருக்கோலம்
மனங்கவர் மாபெரும் கருவூலம்
மறுவின்றி வாழும் மனம்போலே!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading