” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 158
செவ்வாய் 18/01/2022
“பாமுகப் பூக்கள்”
பாமுகம் அளித்த பூமகளே
பாவலர் போற்றும் பாமகளே
“பாவை” மகிழும் பெருமகளே
பார்க்கையில் நீ கலைமகளே!

அழகிய அட்டைப் படத்தாலே
அகிலம் அதிர வைத்தாயே!
பழகு தமிழிலே கவி சுமந்தே
பலரையும் களிக்கச் செய்தாயே!

இருபது மலர்களின் ஓர்கொத்து
இன்பம் தருமோர் அரும் முத்து!
பெருகுது அன்பு பெருவெள்ளம்
பேதை உன்னைக் கண்டதுமே!

சின்னவர் பெரியவர் பேதமின்றி
சிந்தையில் பிறந்த அருவித்து!
அன்னைத் தமிழைஅகத்திருத்தி
அன்பில்விளைந்த ஓர் சொத்து!

எம்மவர் கவிஞர் எழிற்கோலம்
எழிலாய் சேர்ந்த திருக்கோலம்
மனங்கவர் மாபெரும் கருவூலம்
மறுவின்றி வாழும் மனம்போலே!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan