16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 163
22/02/2022 செவ்வாய்
“சாந்தி”
முகிழ்ந்த மொட்டு விரிந்திட்டால்
முல்லைக் கொடியும் சிரித்துவிடும்!
மகிழ்ந்து மனது திளைத்திட்டால்
மனதில் சாந்தி கிடைத்து விடும்!
மனதில் பதிந்த மங்கை யவள்
மனைவி யானால் மகிழ்வு வரும்!
கனவு யாவும் பலித்து விடும்
காத்திர மான அமைதி வரும்!
மழலைக் குரலைக் கேட்டதுமே
மனது மிகவும் அமைதியுறும்!
ஆழிக் கடல் அலையது போல்
ஆடும் மனது சாந்தி பெறும்!
கலையே மனித மனத்தினது
கவலை தீர்க்கும் மருந்தாகும்!
அலையும் மனத்தின் இடர் நீக்கி
ஆழ்ந்த அமைதி தந்துவிடும்!
காயம் பட்ட மனங்களுக்கும்
காலம் மாறும், காயம் தேறும்!
கொரோனா நோயும் தீர்ந்துவிடும்
கோலோச்சச் சாந்தி மீள வரும்!
நன்றி

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...