சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கனவுகளின் சிறகுகள்

நகுலா சிவநாதன் கனவுகளின் சிறகுகள் கனவுகள் கண்களில் தோன்றினாலும் அவை மனதின் சிறகுகளாக விரிகின்றன நினைவுகள் நம்பிக்கைத் தடத்தை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 163
22/02/2022 செவ்வாய்
“சாந்தி”
முகிழ்ந்த மொட்டு விரிந்திட்டால்
முல்லைக் கொடியும் சிரித்துவிடும்!
மகிழ்ந்து மனது திளைத்திட்டால்
மனதில் சாந்தி கிடைத்து விடும்!

மனதில் பதிந்த மங்கை யவள்
மனைவி யானால் மகிழ்வு வரும்!
கனவு யாவும் பலித்து விடும்
காத்திர மான அமைதி வரும்!

மழலைக் குரலைக் கேட்டதுமே
மனது மிகவும் அமைதியுறும்!
ஆழிக் கடல் அலையது போல்
ஆடும் மனது சாந்தி பெறும்!

கலையே மனித மனத்தினது
கவலை தீர்க்கும் மருந்தாகும்!
அலையும் மனத்தின் இடர் நீக்கி
ஆழ்ந்த அமைதி தந்துவிடும்!

காயம் பட்ட மனங்களுக்கும்
காலம் மாறும், காயம் தேறும்!
கொரோனா நோயும் தீர்ந்துவிடும்
கோலோச்சச் சாந்தி மீள வரும்!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan