மனோகரி ஜெகதீஸ்வரன்

சூரவதை

கந்தபுராணம் காட்டும்கதை
கந்தனின் சூரவதை
தந்தவிதம் தருகிறேனதை
இந்தமுறை கேளுங்களிதை
நொந்தமனது ஆறுவகை

அண்டம்விட்டு அண்டம் பாயும்
அசகாய அசுரனே சூரன்
தண்டனிவும் செய்தான் தேவரை
தனக்குச் செய்யவும் வைத்தான் ஏவலை

வீம்பகற்ற வந்தான் முருகன்
அம்புகள் பலவும் தொடுத்தே
வம்புகள் செய்தான் சூரன்

கடைக்கண் பார்வை கொண்டு
முடைகொடுத்தார் எய்வுக்கு முருகன்
நடைதொய்ந்து நடுங்கினாலும் சூரன்
விடைகொடுக்க மறுத்தான் தேவருக்கு

படைதொடுத்துச் செய்தான் மாயம்
இடையிடையே செய்தான் பெருஜாலம்
எடைகுறைந்து படை விழ்ந்தாலும் விடவில்லைப் பிடிவாதம்

திருப்பெருவடிவு கண்டும்
திருந்தாக் குணமே கொண்டான்
கருப்பொருள் இறையே என்பதையும் மறந்தான்

ஏவினான் சிவன்தந்த இந்திரஜாலத்தேரை
காவிக் கந்தன் சேனையைப்
பிரபஞ்ச உச்சியில் வைக்க
தாவித் தடுத்தது வேல்
தனதாக்கினான் தமிழ் கடவுள்
கூவியோடினான் கடல்நடுவே சூரன்
ஆவிகாக்க மாமரமானான் அசுரன்
தாவி அறுத்தது ஞானவேல்
தரிசனம் தந்தன சேவல் மயில்

பாதகன் வேண்டி வணங்க
சாதகம் எங்கும் மலர
சேவகம் செய்து உய்திட
வாகன மாக்கினான் மயிலை
பாதகம் பறக்க கொடியில் ஏந்தினன் சேவலை

சட்டி (சஷ்டி ) யில்தான் மாவறுதான் கந்தன்
பட்டிதொட்டி யெங்கும் ஆணவக் கருவறுப்பான் கந்தன்
தோட்டியவனே தொழுதெழு கேட்டையழித்துக் காப்பான்
எம்கூட்டை

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan