29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
வசந்தா ஜெகதீசன்
பருவத்தின் படிநிலை
உருவத்தில் தளர்நிலை
அனுபவம் செறிவிலே
ஆனந்த மகிழ்விலே
அடைகின்ற தோற்றம்
ஆனந்த மாற்றம்
கடந்தவை பாடமாய்
கற்றவை தேட்டமாய்
காலமே வியப்புறும்
கடைநிலைப் பருவமே
முதுமையின் முதுசம்
முடங்கிடும் பருவம்
வாழ்க்கையின் தோப்பு
வரமெனக் காத்து
உரமென உராய்ந்த
அனுபவச் செதுக்கலே
முதுமையின் சொத்து
மூத்ததலைமுறை காத்தே
வாழுவோம் வாரீர்!
நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.