மூப்பு வந்தாலே…

ரஜனி அன்ரன் (B.A) மூப்பு வந்தாலே… 02.10.2025

வாழ்க்கையின் நியதி வாழ்வியல் தடம்
வரலாற்றின் யதார்த்தம் மூப்பு
காலம் என்றநதி கரைபுரண்டோட
கரைசேரும் படகுதான் மூப்பு
மழலைப் பருவம் நினைவில் மலர
இளமைக் கனவுகள் கதைசொல்ல
முதுமைப் பருவம் முணுமுணுப்போடு நகருமே !

கண்களும் ஒளிமங்கிய தீபமாக
கன்னங்களும் ஒட்டி குழிகளும்விழ
கைகளும் நடுங்க கால்களும் தடுமாற
மூன்றாம் காலும் ஊன்றுகோலாகிட
உடலும் பலத்தை இழக்க உழைத்துக் களைத்தவருக்கு
மூப்பு என்பது ஓய்வுமேடையே !

வாழ்ந்த வாழ்விற்கு சாட்சி
வாழ்வின் வழியில் வந்த அனுபவப்பாடம்
இளமையின் வேகத்தைக் கடந்து
மண்டியிட்டுக் கொள்கிறது முதுமை
முதுமையென்பது யாவர்க்கும் பொதுமை
புதுமையைக் கற்றுத்தரும் ஆசானே முதுமை !

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading