மூப்பு வந்தாலே…

ரஜனி அன்ரன் (B.A) மூப்பு வந்தாலே… 02.10.2025

வாழ்க்கையின் நியதி வாழ்வியல் தடம்
வரலாற்றின் யதார்த்தம் மூப்பு
காலம் என்றநதி கரைபுரண்டோட
கரைசேரும் படகுதான் மூப்பு
மழலைப் பருவம் நினைவில் மலர
இளமைக் கனவுகள் கதைசொல்ல
முதுமைப் பருவம் முணுமுணுப்போடு நகருமே !

கண்களும் ஒளிமங்கிய தீபமாக
கன்னங்களும் ஒட்டி குழிகளும்விழ
கைகளும் நடுங்க கால்களும் தடுமாற
மூன்றாம் காலும் ஊன்றுகோலாகிட
உடலும் பலத்தை இழக்க உழைத்துக் களைத்தவருக்கு
மூப்பு என்பது ஓய்வுமேடையே !

வாழ்ந்த வாழ்விற்கு சாட்சி
வாழ்வின் வழியில் வந்த அனுபவப்பாடம்
இளமையின் வேகத்தைக் கடந்து
மண்டியிட்டுக் கொள்கிறது முதுமை
முதுமையென்பது யாவர்க்கும் பொதுமை
புதுமையைக் கற்றுத்தரும் ஆசானே முதுமை !

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading