அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

மொழி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-43
05-12-2024

மொழி

உலக மொழிகளுள் மூத்தவளே
முச்சங்கம் வளர்த்தவள் நீயல்லவா
தேனினும் இனிய செம்மொழியே
தெவிட்டாமல் நாவுரைக்கும் எம் மொழியே!

வண்ணப் பாட்டு எடுத்து
வாஞ்சையோடு கதை தொடுத்து
அருமையான கவி கிறுக்கி
அகம் குளிர நிற்கின்றேன்!

கண்ணினென் தமிழ்மொழியே
கண்ணாய் உனைப் போற்றி
திசை எட்டும் பரவி வர
திகட்டாமல் இயம்பி நிற்ப்பேன்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan