தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

மொழியும் கவியும்

வஜிதா முஹம்மட்

மொழியும் கவியும்

வரி எழுதா வார்த்தைக்குள்
என் மொழியி௫க்கும்

வசப்படுத்தி க௫சுமர்ந்து
என் கவி இனிக்கும்

தாய்பால் உரமூட்டி
தாலாட்டாய் மொழி துளிர்க்கும்

தாய் தந்த மொழி ரசித்து
நிஜத்தோடு கற்பனை இழைத்தால்
கவி தொடுக்கும்

எண்ணத்தின் மறு பிறவி
மொழி என்பேன்

எழுதி அதை சீர்படுத்தி
கோர்வைக்குள் சு௫க்கி
சுவை படுத்தல் கவியென்பேன்

நிழல் போலே நிலைத்தி௫க்கும்
மொழி எமக்குள்ளே

நில்லாமல் நீரோடை போல்
ஓடும் கவி தானே இதற்குள்ளே

பூட்டி வைத்த இ௫ட்டறைப் பொக்கிஷம்
மொழியாகும்

பூட்டுடைத்து பூச்சொறியும் சொல்
மலர்கள் கவியாகும்

மொழியின் வலிமை
மௌனம் ௨டைக்கும் எழிமை

வலு இழக்கா வரிகளின்
கலவை
மொழியும் கவியும்

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading