சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

மொழியும் கவியும்

வஜிதா முஹம்மட்

மொழியும் கவியும்

வரி எழுதா வார்த்தைக்குள்
என் மொழியி௫க்கும்

வசப்படுத்தி க௫சுமர்ந்து
என் கவி இனிக்கும்

தாய்பால் உரமூட்டி
தாலாட்டாய் மொழி துளிர்க்கும்

தாய் தந்த மொழி ரசித்து
நிஜத்தோடு கற்பனை இழைத்தால்
கவி தொடுக்கும்

எண்ணத்தின் மறு பிறவி
மொழி என்பேன்

எழுதி அதை சீர்படுத்தி
கோர்வைக்குள் சு௫க்கி
சுவை படுத்தல் கவியென்பேன்

நிழல் போலே நிலைத்தி௫க்கும்
மொழி எமக்குள்ளே

நில்லாமல் நீரோடை போல்
ஓடும் கவி தானே இதற்குள்ளே

பூட்டி வைத்த இ௫ட்டறைப் பொக்கிஷம்
மொழியாகும்

பூட்டுடைத்து பூச்சொறியும் சொல்
மலர்கள் கவியாகும்

மொழியின் வலிமை
மௌனம் ௨டைக்கும் எழிமை

வலு இழக்கா வரிகளின்
கலவை
மொழியும் கவியும்

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan