வரமாகும் வாய்ப்புகளே 87

வரமாகும் வாய்ப்புகளே 87 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-02-2026 வரமாகும் வாய்ப்புகளே -இந்த வாய்ப்பெனும் விதையைப் பயிராக்கி வியர்வையை...

Continue reading

ரஜனி அன்ரன்

“ பசி “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 11.08.2022

கொடுமையிலும் கொடுமை பசிக்கொடுமை
பாமரர் வாழ்வினிலோ பெரும் கொடுமை
யாருக்கும் வரக்கூடாதே இந்த வறுமை
வயிற்றினைப் புகைய வைத்து
வாழ்வினை முடித்திடுமே இந்தப்பசி !

பசியின் வலி தெரியாதோர் பஞ்சணையில் புரள
பசியோடு துடிப்பவரோ தெருவிலே அலைய
பாழும் உலகும் கண்டு கொள்வதில்லையே இதை
உணவின் வாசமும் பசியினைத் தூண்ட
பசியெனும் உணர்வு வலியாகி
வாட்டி எடுக்குமே வயிற்றினையும் !

பெற்ற பிள்ளையின் பசியைப் போக்க
சட்டெனவே தந்தை செய்த செயல்
உற்ற நேரத்தில் உதவிய முதலாளி
உடன் உதவிய உறவின் மனிதாபிமானம்
குற்ற உணர்வோடு கூனிக்குறுகி நின்ற காட்சி
குழந்தையின் கள்ளமற்ற பேச்சு
மனதையும் நெகிழ வைத்ததே !

நிஜத்தின் தரிசனத்தை இளகிய மனத்தை
தன்மானத்தினை மகளின் எதிர்காலத்தினை
சுயமரியாதையின் மதிப்பினை
மனிதாபிமானத்தின் மாண்பினை
தெளிவாக்கியதே காட்சிப்பதிவு
பசித்தோர்க்கு உணவளித்து பண்பாடு காத்து
இல்லாதோர்க்கு இரு கரமும் கொடுத்திடுவோம் !

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading