ரஜனி அன்ரன்

“ பசி “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 11.08.2022

கொடுமையிலும் கொடுமை பசிக்கொடுமை
பாமரர் வாழ்வினிலோ பெரும் கொடுமை
யாருக்கும் வரக்கூடாதே இந்த வறுமை
வயிற்றினைப் புகைய வைத்து
வாழ்வினை முடித்திடுமே இந்தப்பசி !

பசியின் வலி தெரியாதோர் பஞ்சணையில் புரள
பசியோடு துடிப்பவரோ தெருவிலே அலைய
பாழும் உலகும் கண்டு கொள்வதில்லையே இதை
உணவின் வாசமும் பசியினைத் தூண்ட
பசியெனும் உணர்வு வலியாகி
வாட்டி எடுக்குமே வயிற்றினையும் !

பெற்ற பிள்ளையின் பசியைப் போக்க
சட்டெனவே தந்தை செய்த செயல்
உற்ற நேரத்தில் உதவிய முதலாளி
உடன் உதவிய உறவின் மனிதாபிமானம்
குற்ற உணர்வோடு கூனிக்குறுகி நின்ற காட்சி
குழந்தையின் கள்ளமற்ற பேச்சு
மனதையும் நெகிழ வைத்ததே !

நிஜத்தின் தரிசனத்தை இளகிய மனத்தை
தன்மானத்தினை மகளின் எதிர்காலத்தினை
சுயமரியாதையின் மதிப்பினை
மனிதாபிமானத்தின் மாண்பினை
தெளிவாக்கியதே காட்சிப்பதிவு
பசித்தோர்க்கு உணவளித்து பண்பாடு காத்து
இல்லாதோர்க்கு இரு கரமும் கொடுத்திடுவோம் !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading