ராணி சம்பந்தர்

28.01.25
ஆக்கம் 174
கவி அழகு

எழுத எழுத எழுதிடத்
தூண்டும் இனிமையில்
உழுத சொற்கள் உவமையோடு ஊன்றிடும் மகிமையில்
தோன்றிடும் பிரமிப்பு

வழியும் மனதில்
விழியின் உணர்வில்
மாறி மாறித் தூண்டலிடும் பொய்யும்
மெய்யும் கரைந்து நின்றிடும் வர்ணிப்பு

மறைந்து தேயும் மாபெரும் கனவுப்
பெட்டகங்களில்
உயிர் கொடுக்கும்
பேனா முனை
தாளில் பரிதவிப்பு

பரந்து விரிந்த பல
வர்ணக் காட்சி
உருவாக உறைந்து
கருவாக வளர்ந்து
உவமை ஒப்பீடு , எதிர்முனையில்
கை கால் முளைத்து
விரைந்து பிறந்திடும்
பிரசவிப்பில் கவி அழகு

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading