” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர்

28.01.25
ஆக்கம் 174
கவி அழகு

எழுத எழுத எழுதிடத்
தூண்டும் இனிமையில்
உழுத சொற்கள் உவமையோடு ஊன்றிடும் மகிமையில்
தோன்றிடும் பிரமிப்பு

வழியும் மனதில்
விழியின் உணர்வில்
மாறி மாறித் தூண்டலிடும் பொய்யும்
மெய்யும் கரைந்து நின்றிடும் வர்ணிப்பு

மறைந்து தேயும் மாபெரும் கனவுப்
பெட்டகங்களில்
உயிர் கொடுக்கும்
பேனா முனை
தாளில் பரிதவிப்பு

பரந்து விரிந்த பல
வர்ணக் காட்சி
உருவாக உறைந்து
கருவாக வளர்ந்து
உவமை ஒப்பீடு , எதிர்முனையில்
கை கால் முளைத்து
விரைந்து பிறந்திடும்
பிரசவிப்பில் கவி அழகு

Nada Mohan
Author: Nada Mohan