ராணி சம்பந்தர்

11.02 .25
ஆக்கம் 176
பங்குனி (பங்கு நீ)

பகைக்கேடான குரோதி
ஆண்டில் – வகை வகையான நன்மை,
தீமை கடந்து
உலக மிகையான
விசுவாச ஆண்டு
பொங்கி வரப்
பங்கு நீயே

அவனியில் பவனி வரும் மானிடர் மனதில்
தங்கிடும் சிவன் பார்வதி கரம் பிடித்து
ஒன்றானதிலும் பங்கு
நீயே

குழந்தைகள் அற்ற
மாந்தர்க்கு புத்திர
பாக்கியம் தந்து
பூத்துக் குலுங்கித்
தவழ மகிழ்ந்திடுவதும்
இப் பங்குனி உத்திர
நட்சத்திரத்திலே

தெய்வம் உண்டென்று
நம்பித் தொடர்வதும்
பாவம் போக்க சிறு
கொடைத்தானமும்
சிறந்தது என உணர்த்தியதும் இம்
மாதத்திலே

குலைந்து கலைந்த
குடும்பங்கள் குதூகல
ஒற்றுமை நிலைத்திட
பிரிந்த சீதை ராமர்
சேர்ந்தது போல்
வாழ்ந்திடுவதில்
மாபெரும் பங்கு நீ
இப் பங்குனியிலே

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading