” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர்

11.02 .25
ஆக்கம் 176
பங்குனி (பங்கு நீ)

பகைக்கேடான குரோதி
ஆண்டில் – வகை வகையான நன்மை,
தீமை கடந்து
உலக மிகையான
விசுவாச ஆண்டு
பொங்கி வரப்
பங்கு நீயே

அவனியில் பவனி வரும் மானிடர் மனதில்
தங்கிடும் சிவன் பார்வதி கரம் பிடித்து
ஒன்றானதிலும் பங்கு
நீயே

குழந்தைகள் அற்ற
மாந்தர்க்கு புத்திர
பாக்கியம் தந்து
பூத்துக் குலுங்கித்
தவழ மகிழ்ந்திடுவதும்
இப் பங்குனி உத்திர
நட்சத்திரத்திலே

தெய்வம் உண்டென்று
நம்பித் தொடர்வதும்
பாவம் போக்க சிறு
கொடைத்தானமும்
சிறந்தது என உணர்த்தியதும் இம்
மாதத்திலே

குலைந்து கலைந்த
குடும்பங்கள் குதூகல
ஒற்றுமை நிலைத்திட
பிரிந்த சீதை ராமர்
சேர்ந்தது போல்
வாழ்ந்திடுவதில்
மாபெரும் பங்கு நீ
இப் பங்குனியிலே

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan