வசந்தா ஜெகதீசன்

சிறுமை கண்டு பொங்குவாய்…
சங்கத் தமிழாய் முழங்குது
சாதனை உயர்வைத் திரட்டுது

மங்காப் புகழின் மாட்சிமை
மறவர் வீரத்தின் ஒற்றுமை
தரணித் தமிழின் தனித்துவம்
தாங்கிடும் சந்ததி முனைப்பிலே
ஒளிருமா இருளுமா
எதிர்காலம்

அணியெனத் திரண்டது புலமை
ஆற்றலை வளர்த்தது திறமை
ஆளுமை மெய்படும் மேன்மை
ஆணிவேராகுமா
புலமை

இரட்டை வாழ்வின் நிர்க்கதி
இயல்பில் குன்றிடும் இழுபறி
இல்லாதொழிந்திடும் சீற்றத்தை
கண்டு குமுறுதே
மனவலி

சீற்றம் தணிப்பதே
செம்மை
சினமின்றி வாழுதல் முறமை
சிறுமை கண்டு குமுறு
சீராய் வாழப் பழகு!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading