” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சிறுமை கண்டு பொங்குவாய்…
சங்கத் தமிழாய் முழங்குது
சாதனை உயர்வைத் திரட்டுது

மங்காப் புகழின் மாட்சிமை
மறவர் வீரத்தின் ஒற்றுமை
தரணித் தமிழின் தனித்துவம்
தாங்கிடும் சந்ததி முனைப்பிலே
ஒளிருமா இருளுமா
எதிர்காலம்

அணியெனத் திரண்டது புலமை
ஆற்றலை வளர்த்தது திறமை
ஆளுமை மெய்படும் மேன்மை
ஆணிவேராகுமா
புலமை

இரட்டை வாழ்வின் நிர்க்கதி
இயல்பில் குன்றிடும் இழுபறி
இல்லாதொழிந்திடும் சீற்றத்தை
கண்டு குமுறுதே
மனவலி

சீற்றம் தணிப்பதே
செம்மை
சினமின்றி வாழுதல் முறமை
சிறுமை கண்டு குமுறு
சீராய் வாழப் பழகு!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan