தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மொழியும் கவியும்....

மொழியும் கவியும்…
கவிக்குள் கருவாய் உருவாகும்
காத்திடம் மிக்கத் தமிழாகும்
காசினி முதன்மை பிரசவம்
குமரியில் உதய தரிசனம்
உலகின் முதன்மை முத்திது
முதல்மொழியாகிய தமிழிது
இலக்கிய இலக்கண நயத்திலே
இயல் இசை நாடகக் கலப்பிலே
முத்தமிழ் மகுடத்தில் மூத்ததமிழ்
கவியெனும் கனிரச வார்ப்பிலே
எதுகையும் மோனையும் உறவாடும்
புதுக் கவி வானே சிறகாகும்
எண்ணச் சிறக்கிற்குள் வசப்பட்டு
எதிலும் கருத்தினை நயமாக்கி
வசப்படும் அகத்திலே வார்ப்பாகும்
மொழியே எம்மைத் தாலாட்டும்
நவரசம் நயம்படக் கவியாகும்
நம்தமிழ் நல்மொழிக் காவியமே!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading