சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மொழியும் கவியும்....

மொழியும் கவியும்…
கவிக்குள் கருவாய் உருவாகும்
காத்திடம் மிக்கத் தமிழாகும்
காசினி முதன்மை பிரசவம்
குமரியில் உதய தரிசனம்
உலகின் முதன்மை முத்திது
முதல்மொழியாகிய தமிழிது
இலக்கிய இலக்கண நயத்திலே
இயல் இசை நாடகக் கலப்பிலே
முத்தமிழ் மகுடத்தில் மூத்ததமிழ்
கவியெனும் கனிரச வார்ப்பிலே
எதுகையும் மோனையும் உறவாடும்
புதுக் கவி வானே சிறகாகும்
எண்ணச் சிறக்கிற்குள் வசப்பட்டு
எதிலும் கருத்தினை நயமாக்கி
வசப்படும் அகத்திலே வார்ப்பாகும்
மொழியே எம்மைத் தாலாட்டும்
நவரசம் நயம்படக் கவியாகும்
நம்தமிழ் நல்மொழிக் காவியமே!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan