வசந்தா ஜெகதீசன்

தரணியின் தாலாட்டு...

தரணியின் தாலாட்டு…
நெறிகளின் ஒழுங்கில் நிமிர்விடுமே
நேர்த்தியின் வாழ்வாய் கிளைவிடுமே
அழகியல் உலகே அரும் வரம்
அவரவர் வாழ்வின் பெரும் நிலம்

ஐம்பூத அசைவின் ஐக்கியம்
ஆளும் ஆற்றலின் அவதாரம்
ஈகை நிறைந்த மனிதமும்
இலக்கு நிறைந்த வேட்கையும்
தரணி தருகின்ற தைரியம்
தன்னம்பிக்கை உலகின் பெரும்பலம்

வரமென உலகில் பலகொடை
வாழ்வின் வெற்றிக்கு அருங்கொடை
இயற்கையின் நியதியில் இரவுபகல்
இயல்பிலே தரணியின் தாலாட்டு
இடரையும் மகிழ்வையும் இணைவாக்கும்
வலிகளை நீக்கவும் வழியாக்கும்

தரணியின் தாலாட்டில் நம் வாழ்வு
தக்கதோர் தைரிய தலைநிமிர்வு
பக்கங்கள் பலதை நிரப்பி நிற்கும்
பாதையின் சுவடுகள் பலகூறே!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

Continue reading