உயிரான உறவு..

வியாழன் கவி 2288 உயிரான உறவு.. உதிரத்தில் உணவூட்டி உணர்வுக்குள் அன்பேந்தி உலகுக்கு வழிகாட்டியவள் உயிரான உறவானாள்.. கருவினுக்கு காரணியாய் காலமெலாம் தாங்கி...

Continue reading

உயிரான உறவே…

வசந்தா ஜெகதீசன் உயிரான உறவே... வெற்றி மிகு வாழ்வில் வீறு கொள்ளும் சிந்தை பற்றியே படர்கின்ற பாதையின் செதுக்கல் பாசமுடன் காட்டி நேசமுடன்...

Continue reading

உயிரான உறவு…..

இரா.விஜயகௌரி வைகறைகள் உயிர்ப்பெழுதும் வனப்பு மிக்க விடியலுக்கு தினமெழுதும் மொழிப்புனலாய் கனவெழுதும் தேவதை இவள் தன்வலியை தான் மறப்பாள் உதிரத்துள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தரணியின் தாலாட்டு...

தரணியின் தாலாட்டு…
நெறிகளின் ஒழுங்கில் நிமிர்விடுமே
நேர்த்தியின் வாழ்வாய் கிளைவிடுமே
அழகியல் உலகே அரும் வரம்
அவரவர் வாழ்வின் பெரும் நிலம்

ஐம்பூத அசைவின் ஐக்கியம்
ஆளும் ஆற்றலின் அவதாரம்
ஈகை நிறைந்த மனிதமும்
இலக்கு நிறைந்த வேட்கையும்
தரணி தருகின்ற தைரியம்
தன்னம்பிக்கை உலகின் பெரும்பலம்

வரமென உலகில் பலகொடை
வாழ்வின் வெற்றிக்கு அருங்கொடை
இயற்கையின் நியதியில் இரவுபகல்
இயல்பிலே தரணியின் தாலாட்டு
இடரையும் மகிழ்வையும் இணைவாக்கும்
வலிகளை நீக்கவும் வழியாக்கும்

தரணியின் தாலாட்டில் நம் வாழ்வு
தக்கதோர் தைரிய தலைநிமிர்வு
பக்கங்கள் பலதை நிரப்பி நிற்கும்
பாதையின் சுவடுகள் பலகூறே!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan