கனவான காதல் 85

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-02-2026

மூன்று மாடிக் கட்டடத்தில்
முன்வருபவர் யாரென அறியாமல்
சாளரம் வழிச் சாலையை வெறித்துச்
சாய்ந்திருந்தாள் ஒரு சுந்தரி!

பெற்றோரின் காதலா? இல்லை
உடன்பிறந்தோர் பாசமா?
உறவுகளின் காதலா? இல்லை
ஊரின்மேல் கொண்ட ஏக்கமா.?

ஏனிந்த மௌனம்? ஏன் தானோ ஏக்கம்?
நெஞ்சம் கொஞ்சம் கனக்கிறது…
நேசமேதும் அருகில் அற்று
நெருங்கும் உறவும் யாருமற்று!

பேதையாகி நின்றவளைத் தாதி
பெரும் மனதோடு கட்டியணைத்து,
மீட்டெடுத்தாள் புன்னகையால் – அவள்
விரல் நுனியின் நாடித்துடிப்பால்!

காலங்களும் காட்சிகளும் மாற,
கனவான காதலும் வலித்திட…
மரண வாசலில் நின்றோரும் – இன்று
உயிர் மீட்பது பாச மொழி!

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading