இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தரணியின் தாலாட்டு...

தரணியின் தாலாட்டு…
நெறிகளின் ஒழுங்கில் நிமிர்விடுமே
நேர்த்தியின் வாழ்வாய் கிளைவிடுமே
அழகியல் உலகே அரும் வரம்
அவரவர் வாழ்வின் பெரும் நிலம்

ஐம்பூத அசைவின் ஐக்கியம்
ஆளும் ஆற்றலின் அவதாரம்
ஈகை நிறைந்த மனிதமும்
இலக்கு நிறைந்த வேட்கையும்
தரணி தருகின்ற தைரியம்
தன்னம்பிக்கை உலகின் பெரும்பலம்

வரமென உலகில் பலகொடை
வாழ்வின் வெற்றிக்கு அருங்கொடை
இயற்கையின் நியதியில் இரவுபகல்
இயல்பிலே தரணியின் தாலாட்டு
இடரையும் மகிழ்வையும் இணைவாக்கும்
வலிகளை நீக்கவும் வழியாக்கும்

தரணியின் தாலாட்டில் நம் வாழ்வு
தக்கதோர் தைரிய தலைநிமிர்வு
பக்கங்கள் பலதை நிரப்பி நிற்கும்
பாதையின் சுவடுகள் பலகூறே!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading