” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தரணியின் தாலாட்டு...

தரணியின் தாலாட்டு…
நெறிகளின் ஒழுங்கில் நிமிர்விடுமே
நேர்த்தியின் வாழ்வாய் கிளைவிடுமே
அழகியல் உலகே அரும் வரம்
அவரவர் வாழ்வின் பெரும் நிலம்

ஐம்பூத அசைவின் ஐக்கியம்
ஆளும் ஆற்றலின் அவதாரம்
ஈகை நிறைந்த மனிதமும்
இலக்கு நிறைந்த வேட்கையும்
தரணி தருகின்ற தைரியம்
தன்னம்பிக்கை உலகின் பெரும்பலம்

வரமென உலகில் பலகொடை
வாழ்வின் வெற்றிக்கு அருங்கொடை
இயற்கையின் நியதியில் இரவுபகல்
இயல்பிலே தரணியின் தாலாட்டு
இடரையும் மகிழ்வையும் இணைவாக்கும்
வலிகளை நீக்கவும் வழியாக்கும்

தரணியின் தாலாட்டில் நம் வாழ்வு
தக்கதோர் தைரிய தலைநிமிர்வு
பக்கங்கள் பலதை நிரப்பி நிற்கும்
பாதையின் சுவடுகள் பலகூறே!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan