அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

சுடர்..
அறிவுச் சுடரே அடித்தளம்
ஆற்றல் முயற்சி விழித்தளம்
எழுகைச் சுடரில் தியாகமே
எண்ணப் படர்வில் ஞாலமே

உழைப்பின் உயர்வே
சுடராகும்
உலகில் சுடர்கள் பலவாகும்
தினமும் சுடரே ஒளியாகும்
தேவைக் கேற்ப திரிபாகும்
தேசவழமைச் சுடரேற்றல்
தீர்வின் நிலைக்கும் வழிகாட்டல்
கன்னல் மொழியின் மழைத்தூறல்
காசினி எங்கும் தமிழ் ஆற்றல்
சுடராய் ஏற்றும் தீப ஒளி
சூழல் வெளிச்ச ஞான ஒளி
சுட்டே எரிக்கா சுடர்தீபம்
சுதந்திர வாழ்வின் ஒளித்தீபம்!.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan