தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வர்ண வர்ணப் பூக்களே

வர்ண வர்ணப் பூக்களே

பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில் காட்சியும் தோன்றும்
மண்ணும் மகிழவே மாநிலத்தின் இயற்கையும்
பூக்கள் விரியவும் வண்டுகள் அமரவும்
கீதங்களாக இசையும் பிறந்திடும் போதிலே
ஆடும் நினைவுகள் ஆயிரம் கோடியடி
கண்ணுக்கு விருந்தும் கமலங்களின் எழுச்சியும்
பேசும் சித்திரங்களாய் காற்றோடு பேசுதே
கமிழும் மணத்தின் வாசனையும் மயங்கிடவே
ஆகா அருமை அகிலத்தின் பெருமை
ஓகோ வர்ண வர்ணப்பூக்களே வாழ்க

சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading