06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில் காட்சியும் தோன்றும்
மண்ணும் மகிழவே மாநிலத்தின் இயற்கையும்
பூக்கள் விரியவும் வண்டுகள் அமரவும்
கீதங்களாக இசையும் பிறந்திடும் போதிலே
ஆடும் நினைவுகள் ஆயிரம் கோடியடி
கண்ணுக்கு விருந்தும் கமலங்களின் எழுச்சியும்
பேசும் சித்திரங்களாய் காற்றோடு பேசுதே
கமிழும் மணத்தின் வாசனையும் மயங்கிடவே
ஆகா அருமை அகிலத்தின் பெருமை
ஓகோ வர்ண வர்ணப்பூக்களே வாழ்க
சிவரூபன் சர்வேஸ்வரி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.