வர்ண வர்ணப் பூக்களே

வர்ண வர்ணப் பூக்களே

பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில் காட்சியும் தோன்றும்
மண்ணும் மகிழவே மாநிலத்தின் இயற்கையும்
பூக்கள் விரியவும் வண்டுகள் அமரவும்
கீதங்களாக இசையும் பிறந்திடும் போதிலே
ஆடும் நினைவுகள் ஆயிரம் கோடியடி
கண்ணுக்கு விருந்தும் கமலங்களின் எழுச்சியும்
பேசும் சித்திரங்களாய் காற்றோடு பேசுதே
கமிழும் மணத்தின் வாசனையும் மயங்கிடவே
ஆகா அருமை அகிலத்தின் பெருமை
ஓகோ வர்ண வர்ணப்பூக்களே வாழ்க

சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading