வலி சுமந்த வைகாசி

சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில் செல்லும் தாயவள்!
ஓலமிட்டு ஓலமிட்டு ஓய்ந்த அவள் இதழ்கள் மௌனத்தோடும் சோரவோடும் கல்லறை அஞ்சலி செய்து இனிவரும் நாட்களில் எவர் செய்வாரோ?
தொடரும் அவள் முதுமையில்
அவள் கதை முடியுமானால் ….
கால ஓட்டத்தில் கரையும் கதையாகும் அவன் தியாகங்கள்!
வீரன் அவன் தியாக வேள்வியை வேதனை கொண்டு யார் நினைப்பார்? யார் தொடர்வார்?

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading