விடியாத இரவொன்று…..

விடியாத இரவொன்று….
மெளனத்தின் கதவுகள் மூடிய பாதை
தகனத்தில் உறவுகள் தவித்த வேளை
சொல்லொணத் துன்பத்தில் இதயத்தின் பாரம்
வில்லெனத் தைக்குமே வார்த்தையின் காரம்

ராசியற்றவள் என்றிடும் அம்பு
ராச்சியம் முழுதிலும் பாய்ச்சிய சொல்லு
போக்கிடமற்றதாய் புறந்தள்ளிய
கணத்தில்
தேக்கிட முடியாத கண்ணீர் அருவி
தேம்பியே மடிந்தாள் விடியாத இரவில்
நாளை விடியல் நமக்கெனத் துணிந்தாள்
காரிருள் கிழித்து கங்கையாய்த் திரண்டாள்
யாரிவர் நானிலப்புவியில் நம்விதி உரைக்க

போரிட எழுவாய் புலம்பலை நிறுத்து
வாழ்வுறு தகுதியை வரலாறாய் பதித்து

விடியாத இரவின் விடியலாய் நிமிர்த்து
விமர்சனப் பதிவினை வெற்றியாய் அணிந்து
வீறுகொள் விண்மீனென ஒளிர்ந்து
ஞாலமே நமக்கென திரண்டிடும்
விடியாத இரவுகளும் விடியலின் வெள்ளியே!
நன்றி. மிக்கநன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading