விடியாத இரவொன்று

விட்டில் பூச்சிகளாய்
விளையாடித் திரிந்தது
வானிலே சிறகடித்து
பறந்து. திரிந்தது
எண்ணப் பறவைகளாய்
எதிலுமே பயமின்றி
வலம் வந்தது
கன்னிப் பருவத்திலே
கனவுகளில் மிதந்தது
கல்வியிலே சிறப்பு
பெற்று இருந்தது
இல்லறத்தில் இணைந்தது
இல்லற வாழ்க்கை
மகிழ்வில் சென்றது
பிள்ளை பேரப்பிள்ளை
கண்ட மகிழ்வில்
இருக்க காலம்
செய்த கொலம்
வாழ்வில் ஒருநாள்
விடியாத இரவொன்று
கனவிலும் நினையாத
விடியாத இரவொன்று
என் வாழ்விலே!

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading