“விடியாத இரவொன்று “

“ விடியாத இரவொன்று “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 14.03.2024

விடியாத இரவென்று
முடியாத நிகழ்வென்று
எதுவுமில்லையே இவ்வுலகில்
மாற்றிடலாம் மனசு வைத்தால்
திடமான மனதிருந்தால்
விடியாத இரவுதனை
விடியலாக்கிப் பார்த்திடலாம் !

கனவுகளைக் கற்பனைகளை
நினைவுகளை நிஜங்களைப்
புதைத்து விடுகிறது
விடியாத இரவுகளும்
புதிரான புதிர்களும்
முடியும் முடியுமென்று
முனைப்போடு செயற்பட்டால்
விடியாத பொழுதுகளை
வெளிச்சம் ஆக்கிடலாம் !

இருள் எனும் பெரும்புயல்
இருட்டடிப்பு செய்தாலும்
பகலவனின் பட்டொளியில்
பாரெல்லாம் ஒளிர்ந்திடுமே
விடியாத இரவுகள் எல்லாம்
விடியல் பொழுதின் எழுச்சியே !

Nada Mohan
Author: Nada Mohan