” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

“விடியாத இரவொன்று “

“ விடியாத இரவொன்று “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 14.03.2024

விடியாத இரவென்று
முடியாத நிகழ்வென்று
எதுவுமில்லையே இவ்வுலகில்
மாற்றிடலாம் மனசு வைத்தால்
திடமான மனதிருந்தால்
விடியாத இரவுதனை
விடியலாக்கிப் பார்த்திடலாம் !

கனவுகளைக் கற்பனைகளை
நினைவுகளை நிஜங்களைப்
புதைத்து விடுகிறது
விடியாத இரவுகளும்
புதிரான புதிர்களும்
முடியும் முடியுமென்று
முனைப்போடு செயற்பட்டால்
விடியாத பொழுதுகளை
வெளிச்சம் ஆக்கிடலாம் !

இருள் எனும் பெரும்புயல்
இருட்டடிப்பு செய்தாலும்
பகலவனின் பட்டொளியில்
பாரெல்லாம் ஒளிர்ந்திடுமே
விடியாத இரவுகள் எல்லாம்
விடியல் பொழுதின் எழுச்சியே !

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading