விடியாத இரவொன்று…………

புலராத பொழுதொன்றின்
புலம்பல்களின். திரள்வுகளை
நிரப்பி நிறைத்து மௌனிக்கிறது
அழியாத. கோலங்களாய் அலங்கரித்து

ஓடும். பொழுது தனை கையகப்படுத்தாது
கனவுக்காலங்களின். காட்சித்திரட்சியுள்
வெற்றுக்காகிதமாய். வினாக்குறிகளை
தனக்குள் நிறைக்கின்ற அதி மேதாவியாய்

வாய்ப்பந்தல். போடுவதும் வாய்கிழியப் பேசுவதும்
செறிவார்ந்த செயல்களின்றி காயப்
புலம்பல்களின் கீறல்களை. ரசிப்பதுமாய்
வாழ்வுக் கோலத்தை கலைக்கும் மனிதர்களாய்

சிந்தனைக் கதவைத் திறக்காத இவர்கள்
வக்கணையாய்ப் பேசும் வல்ல சீவன்கள்
வடிவமைக்கத்தெரியாத புல்லுருவிகள்
ஆம்விடியாத இரவுகளின் வீணான. பித்தர்கள்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading