” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

வீதியில் பிச்சைக்காரன்.

கவி இலக்கம் 26

நான் வீதியில் கண்ட பிச்சைக்காரன்.
உடல் மெலிந்து,
வயிறு வற்றி,
தலை வழுக்கை
விழுந்து,

மேலாடை
கிழிந்த வண்ணம்
நின்றவன்,

அவன் ஒரு
பிச்சைக்காரன்,
எனினும்,

கொடை வள்ளல்
பாரிக்கு ஒப்பானவன்,
தான் உண்ண
வழி இல்லாத போதிலும்,

தன் கையிலிருந்த
ஒரு இட்லியை,
தனது அருகேயிருந்த
நாயிற்கு கொடுத்த
வள்ளலவன்,

நான் அவனிடம்
வினவினேன்,அவன்
பதில் கேட்டு
வியந்தேன்,

ஐந்தறிவு ஜீவன்
இது,நன்றி உள்ள
மிருகம் இது,

நான் இறப்பினும்
இறப்பேன்,அதை
இறக்க இடமளியேன்,

என்னை நம்பி
வந்த ஜீவனது,
அதை பட்டினி
போடவும் ஏன் மனம்
அனுமதியாது,

என்று கூறிய
அவன் வார்த்தை,
அவனை அந்தப்
பாரியிலும்
மேலுயர்த்தி விட்டது.
-விண்ணவன் – குமுழமுனை.

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading