ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

வெட்டு

ஜெயம்

வெட்டு ஒன்று துண்டு இரண்டென
எடுப்பாய் முடிவை பட்டு பட்டென
எட்டிப்பார்த்து பயந்து பதுங்கி இராது
தொடுப்பாய் செயலை வருவதை பாராது

உடனுக்குடன் ஒன்றை கதைப்பதும் நலமே
மறைப்புகளில்லாத மனதிற்கு இல்லையே பயமே
நடப்பதை மறைக்காது உச்சரிக்கும் உளமே
கறையில்லா வாழ்க்கையால் அடைந்திடும் ஜெயமே

முகத்தில் அடித்தாற்போல் கதைக்கின்றார் என்பார்
வளர்ப்பு சரியில்லையென புறங்கூறி திரிவார்
அகத்தின் அழுக்கில் சுகங்காணும்
பெரியார்
அழகான வெள்ளை உள்ளத்தை புரியார்

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading