வெண்பனி

வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும் அழகுடன் பனிப்பொழிவின் காட்சி
சத்தமில்லாமல் இறங்கி கவிதை எழுதும்
சுத்தமான வெண்மையாய் மாறிவிடும் பொழுதும்
ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் நிகழ்வு
வானம்பார்த்து விளையாடி சிறுவர்களோ மகிழ்வு
பனியின் பளிங்கு ஆடையினை மலையும்
அணிந்து அடையாளத்தை மாற்றுகின்ற நிலையும்
கட்டிவிடும் இயற்கை கனவுலகத் தோற்றம்
கொட்டிவிடும் பனியால் வந்ததிந்த மாற்றம்
உண்மையில் இயற்கையின் மென்மையான புன்னகை
வெண்பனி அபூர்வமான பரிசொன்றின் வகை
மனதை வருடிவிடும் இனிமையான அனுபவம்
ஜெயம்

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading