புதைகுழிகளின் மர்மங்கள்……

ரஜனி அன்ரன் (B.A)..புதைகுழிகளின் மர்மங்கள் 27.08.2026 காணாமல் ஆக்கப்பட்டோர் நாளும் காலம்தோறும் கனதியாய் மனதைத்தைக்க புதைகுழிகளின் மர்மங்களும்...

Continue reading

திண்டாடிடும் வண்டவாளம்

ராணி சம்பந்தர் கதிரையில் சொகுசாக இருந்து கொண்டே குதிரை ஓடியவரே திரையில் கரைபுரண்டு சரையில் பணத்தாளைச் சுருட்டி அக்கரை பதுக்கிட துரைமாரது சுரை...

Continue reading

27.08.2026 வெற்றிமணி அறிமுக விழா 2053 ஜெயா நடேசன்

வெற்றிமணி ஆசிரியரின் இரு புத்த்தகங்கள் என் கனவை நனவாக்கிய தந்தைக்கு சமர்ப்பணமான வெற்றிமணியின் இரு அறிமுக...

Continue reading

வெண்பனி

வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும் அழகுடன் பனிப்பொழிவின் காட்சி
சத்தமில்லாமல் இறங்கி கவிதை எழுதும்
சுத்தமான வெண்மையாய் மாறிவிடும் பொழுதும்
ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் நிகழ்வு
வானம்பார்த்து விளையாடி சிறுவர்களோ மகிழ்வு
பனியின் பளிங்கு ஆடையினை மலையும்
அணிந்து அடையாளத்தை மாற்றுகின்ற நிலையும்
கட்டிவிடும் இயற்கை கனவுலகத் தோற்றம்
கொட்டிவிடும் பனியால் வந்ததிந்த மாற்றம்
உண்மையில் இயற்கையின் மென்மையான புன்னகை
வெண்பனி அபூர்வமான பரிசொன்றின் வகை
மனதை வருடிவிடும் இனிமையான அனுபவம்
ஜெயம்

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading