20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
சிவதர்சனி
வியாழன் கவி 1560!
மாற்றத்தின் திறவுகோல்!
மாறாத்தன்மை கொண்ட மாற்றம்
ஏற்றம் நம்மில் தந்திடும் நாளும்
குற்றம் குறைகள் கொண்ட போதும்
கூன் நிமிர்த்த வேண்டுமே மாற்றம்!
சாற்றும் வெற்றி என்னும் சாரல்
சரிதம் ஆக வேண்டும் திறவுகோல்
புரிதல் நம்மில் உயர்ந்திட வேண்டும்
புன்னகை ஒளியே தெறித்திட வேண்டும்!!
இரும்புக்கூட்டு இதயம் தன்னில்
இளகும் அன்பை இணைத்துக் கொள்ள
கலகம் மாறிக் கருணை சிந்தும்
காலம் தோழமை சூடி வெல்லும்!!
விஞ்ஞான மிரட்சி வினைத்திறனாம்
அஞ்ஞான இருளில் அக விழியாம்
பஞ்சமும் பனியாய் மூடிடவே
பரிதவிப்பில் அல்லாடும் மனிதமாம்!
திறவுகோல் நம்பிக்கை என்றிடலாம்
திறக்குமே கொடையெனும் பெட்டகமாம்
பிறக்கட்டும் புதுவித உத்திகளும்
புவனத்தின் தலைவிதி மாற்றிடவே!!
சிவதர்சனி இராகவன்
45/1/2022

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...