Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும் தலைவனார் தாயுமானவர் குடும்பத்தில் முதல் தலைவனாவர் உழைப்பால் மிகவும் உயர்ந்தவர் தந்தை எனும் உயர் மனிதரே பிள்ளைகளின்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 78

உள்ளம் உவகை பொங்கும்

அலைகடல் தரை தடவ
அலை தடவாது நாம் ஒட
துள்ளும் அலை பேர் கொண்டு
பெரிதாக நமை நனைக்க
உள்ளம் உங்கள் பொங்கும்

மனம் பரப்பும் மகிழம்பூ
பூ மஞ்சம் தரை பரப்ப
மகிழ்ந்து வாரி யதைத் தொடுத்து
மங்கையவள் தலையை அலங்கரித்தால்
உள்ளம் உவகை பொங்கும்

பல வகை உணவுகள்
பாங்காக சமைத்து பரப்பி
பலர் சேர்ந்து கூடி சிரித்து உண்டால்
உள்ளம் உவகை பொங்கும்

வெள்ளை சிரிப்பு சிறுவர் சிறுமிகள் சிரித்திட்டால்
வேதனைகள் பரந்தோடி
துள்ளும் அந்த மனத்தோடு
துள்ளிக் குதூகலித்து
உள்ளம் உவகை பொங்கும்

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan