நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

« தடம் மாறும் பாதையிலே”

நேவிஸ் பிலிப் கவி இல(630)

வெற்றிகளைப் பெற்றுக் கொள்
தோல்விகளைக் கற்றுக் கொள்
இன்றைய் விடியலுக்காய் ஏங்கிடாதே
நாளை விடியுமென நம்பி பாடுபடு

இக்கரைக்கு அக்கரை பச்சையென
சிந்தை மயங்காதே
இக்கரை இருப்பதைச் சொல்லும்
அக்கரை மாயை செய்யும்.

கானல் நீரில் தாகம் தணிக்காதே
அற்ப மகிழ்ச்சியில் மயங்கி
வாழ்க்கையை அர்ப்பணித்தால்
அற்புத வாழ்வு தொலைவாகும்

மாய வலையில் சிக்கி
மதிப்பிழந்து மாய்ந்திடாதே
காலச் சக்கரத்தில்சிக்கி
சிந்தையை சிதைத்திடாதே

நினைத்து நடக்காவிடில்
விதியை வென்று
மதியுடன் மீண்டுவா
நன்றி,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan