சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம்…..

ரஜனி அன்ரன் (B.A) ...சூடு பிடிக்கிறது....09.07.2026 பச்சைப்புல்வெளி போர்க்களமாக பந்து மட்டும் ஆயுதமாக வீரர்கள் கால்களோ பம்பரமாக...

Continue reading

« தடம் மாறும் பாதையிலே”

நேவிஸ் பிலிப் கவி இல(630)

வெற்றிகளைப் பெற்றுக் கொள்
தோல்விகளைக் கற்றுக் கொள்
இன்றைய் விடியலுக்காய் ஏங்கிடாதே
நாளை விடியுமென நம்பி பாடுபடு

இக்கரைக்கு அக்கரை பச்சையென
சிந்தை மயங்காதே
இக்கரை இருப்பதைச் சொல்லும்
அக்கரை மாயை செய்யும்.

கானல் நீரில் தாகம் தணிக்காதே
அற்ப மகிழ்ச்சியில் மயங்கி
வாழ்க்கையை அர்ப்பணித்தால்
அற்புத வாழ்வு தொலைவாகும்

மாய வலையில் சிக்கி
மதிப்பிழந்து மாய்ந்திடாதே
காலச் சக்கரத்தில்சிக்கி
சிந்தையை சிதைத்திடாதே

நினைத்து நடக்காவிடில்
விதியை வென்று
மதியுடன் மீண்டுவா
நன்றி,,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading