மாறியதே வாழ்க்கை

நகுலா சிவநாதன் மாறியதே வாழ்க்கை மாறியதே வாழ்க்கை மனம்போன போக்கிலே! கூறியதே கதைகளும் குழம்பிய குட்டைகளாய் வெப்பத்தின் அதிகரிப்பாய் வேறிட வாழ்க்கையும் இன்று தெப்பமாய்...

Continue reading

கோடை 30.06.2026

செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின் வேகம்

கோயில் திருவிழா
பிறந்தநாள் திருமணம்
விடுமுறை காலம்
கொண்டாட்டம் பலதும்
வந்திடும் நேரம்
கோலோச்சம் போன்று
அடுக்காய் சேர்ந்திடும்

குளம்குட்டை கால்வாய்
ஆறு மானிடர் கூட்டம்
குடி கூத்து சத்தம்
பகல் இரவு ஆட்டம்

பகலவனின் அனலும்
சுட்டெரிக்கும் வாரம்
பகல் இரவு உணவிலே
குறைக்கனும் காரம்

கோடை வந்தாலே
மழையும் மறைவு
கொழுத்தும்வெயிலும்
சொற்பமாய் நிறைவு

செல்வி நித்தியானந்தன்

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading