பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 157

தலைப்பு — திருமணத் திருநாள்

நாதஸ்வர நல்லிசை நாற்புறமும் நிறைந்திருக்க
ஆதரவுதரு நிறைகுட இதயமலர் வரவேற்க
பேதமின்றி வந்தவர்கள் பொறுமையுடன் பார்த்திருக்க
வேதமந்திரத்துடன் நிகழ்வை வேதியர் ஆரம்பித்தார்.

மகளாய் மகனாய் மருமக்களாய் மணமக்களை
மிகமகிழ்வுடன் பெற்றோர் மணமேடையில் வரவேற்க
அகமகிழப் பெற்றாலி அணிவித்து அன்றுமுதல்
மணமகளை மனைவியாக்கி மகிழ்கிறார் மணமகன்.

மணமக்கள் கருத்தொருமித்து மங்கலமாய் வாழ்கவென
மணமக்களை வாழ்த்துகின்றார் மணநிகழ்வில் கலந்தோர்
மணமக்கள் இன்றுபோல் மகிழ்வுடன் என்றும்
இணக்கமுடன் இனிதே இல்லறம் நடத்திடுக.

நன்றி வணக்கம்🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
11/01/2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading