நகுலா சிவநாதன்

அரிதினும் அரிது

அரிதினும் அரிது மானிடப்பிறப்பு
அதனிலும் அரிது சுகமாய் வாழ்தல்
சுத்தம் பேணி சுகமாய் இருந்தால்
நித்தம் மகிழ்வு நிலையாய்க் கிடைக்கும்

தினமும் சுத்தம் சிரசில் கொண்டால்
மனமும் மகிழ்வு மானிவாழ்வில்
தனமும் தானமும் தக்கபடி நிலைக்க
தகுதியாய் உடலும் இருத்தல் நலமே!

ஆரோக்கிய வாழ்வே அவனியில் சிறப்பு
அதனிலும் சிறப்பு பலமது கொள்ளல்
கணமது உடலும் கடுகதி விரைவும்
மனமதை மாற்றும் மாற்ற வலைகள்

விரைந்திடும் உலகில் விலைவாசி ஏற்றம்
மருந்தது கிடைக்கா மாயத் தோற்றம்
உடலின் வலுவை உயிர்ப்புடன் காக்க
வேண்டுமே!உடற்பயிற்சி உள்ளத்தில் என்றுமே!

நகுலா சிவநாதன்1663

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading