மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

இரா விஜயகௌரி

பிரியாத உறவுகள்

விரியாதகனவுகளோடு
நித்தமும் பயணிக்கும்
பிரியாத உறவுகள் அவை
புரியாத நேச இழைவெழுத

அழியாத வலைப்பின்னல் ஆங்கே
மொழியாத. உணர்வுகளை
விழியால் குழைவெழுத-நித்தம்
அழையா விருந்தாளி. போலிவர்

சொரியாத மலராய் சொரிந்தபடி
வரைகின்ற. மலர்வில் மனம்மகிழ
எழிலாகும். விடியலே. -நம்மை
உரிமைக்குரலாய் உயிர்ப்பிக்கும்

பரிவோடு. கரைகின்ற பாசமும்
பழகிடில் கனிந்திடும் நேசமும்
வேஷமே. இல்லாத காதலும்
அன்பின் பரிமாணப்புதையல்களாம்

ஆம். குழந்தைகள் எழுதும் உயிர்ப்பினில்
அடடா வானவில். பேரெழில் மொழிந்திட
எத்தனை அழகியல் உறவிலே
பிரியாத வரமாகும் தலைமுறை

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading