மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கமலா ஜெயபாலன்

விழிபேசும் மொழிகள்
கண்ணோடு கண்பேச கார்முகிலும் தானோடி
விண்ணதிரக் கொட்டியுமே வேகமாயும்-மண்ணினிலே
பெண்ணவளும் மெய்சிலிர்க்க பேசுகிறாள் விழிகளினால்
பண்ணிசையும் பாய்ந்தோட பாவையவள்-கண்பாடும்
காதலினால் கண்பேசும் காரிகையாள் தானசைய
பாதவிரல் கோலமிட பேதையவள்-மோதலினால்
என்மனமும் பேதலிக் ஏங்குகிறேன் உன்நினைவால்
முன்னின்று கன்னியவள் மூச்செறிந்து-அன்பினாலே
இன்பயூற்றில் ஏங்குகிறாள் ஏற்றமுடன் கண்களினால்
சொன்னபதல் சொர்க்கமடி சுந்தரியே-என்னவளே
வேல்விழியால் வேகமுடன் வந்தபதில் சொர்க்கமடி
பால்வடியும் உன்வதனம் பார்வையால் -கால்பார்க்க
பொங்கிவரும் நீரூற்றாய் போனேனடி பெண்ணரசி
அங்கதனில் கண்விழித்தேன் அஞ்சுகமே-நெஞ்சமதில்
காதலினால் வாழ்வினிலே களித்திடலாம் என்னாளும்
மோதலிலும் காதல்வரும் முனைப்பு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading