” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி.அபிராமி கவிதாசன்.

13.09.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 191

தலைப்பு !
“ எண்ணம் “
எண்ணம் என்னும்
என்றன் தோட்டம்
வண்ண மலர்கள்
வளர்ந்து செழிக்குதே //

மண்ணின் பெருமை
மலர்ந்து நின்றதோ
திண்ணம் கொண்டே
தீர்வாய் நகைக்குதோ //

நிலமும் விதையும்
நகமும் சதையுமாய்
வளமும் கொண்டிட
படரும் கொடியென //

சொல்லிலும் செயலிலும்
சிலர்உருவம் தெரியுதே
நல்வினை தீவினை
நாலுபேரைக் கொல்லுதே

உள்ளொன்றும் புறமொன்றும்
உள்ளங்கள் உளறுதே
வெள்ளி நகைப்புடனே
வினைகளை விதைக்குதே //

நாவென்னும் ஆயுதம்
நாற்புரமும் தாக்குதே
வாவென்ற உறவுகளும்
வாசலோடு நிற்குதே
எண்ணமொரு குரங்கென
என்தாத்தா கூறுவார்
திண்ணமுடன் கிளையிலே
திடமாய் நின்றிடு. //

நன்றி அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan