மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

திருமதி.அபிராமி கவிதாசன்.

13.09.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 191

தலைப்பு !
“ எண்ணம் “
எண்ணம் என்னும்
என்றன் தோட்டம்
வண்ண மலர்கள்
வளர்ந்து செழிக்குதே //

மண்ணின் பெருமை
மலர்ந்து நின்றதோ
திண்ணம் கொண்டே
தீர்வாய் நகைக்குதோ //

நிலமும் விதையும்
நகமும் சதையுமாய்
வளமும் கொண்டிட
படரும் கொடியென //

சொல்லிலும் செயலிலும்
சிலர்உருவம் தெரியுதே
நல்வினை தீவினை
நாலுபேரைக் கொல்லுதே

உள்ளொன்றும் புறமொன்றும்
உள்ளங்கள் உளறுதே
வெள்ளி நகைப்புடனே
வினைகளை விதைக்குதே //

நாவென்னும் ஆயுதம்
நாற்புரமும் தாக்குதே
வாவென்ற உறவுகளும்
வாசலோடு நிற்குதே
எண்ணமொரு குரங்கென
என்தாத்தா கூறுவார்
திண்ணமுடன் கிளையிலே
திடமாய் நின்றிடு. //

நன்றி அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading